திருப்பூர் ஜூன், 18
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே முட்டைகள் ஏற்றி வந்த லாரியும் அரசு பேருந்தும் மோதிக்கொண்டதில் சுமார் 25,000 அதிகமான முட்டைகள் சாலையில் கொட்டி உடைந்தன. வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் சாலையில் ஆறாக ஓடின. இதனைக் கண்ட மக்கள் உடையாமல் இருந்த முட்டைகளை போட்டி போட்டு அள்ளிச் சென்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.