சென்னை ஜூன், 11
தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் கூட்டத்தொடரின் தேதி மாற்றப்படலாம் என கூறப்படுகிறது .கூட்டத்தொடர் நடைபெற்றால் கட்சியினரால் தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்பதால் உறுப்பினர்கள் தேதியை மாற்ற கோரிக்கை வைக்கவுள்ளனர்.