புதுடெல்லி ஜூன், 7
பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்படும் எனப் பரவலாகப் பேசப்பட்டது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இதனால், எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியாத சூழல் பாஜகவுக்கு உருவாகியுள்ளதால், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை சாத்தியமாகுமா என்பது இனிமேல் தான் தெரியவரும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.