ஓசூர் ஏப்ரல், 7
பாராளுமன்ற தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறிப்பாக ஓசூர் அருகே மாநில எல்லையோர பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்த வந்த கொரியர் சர்வீஸ் வாகனத்தை அவர்கள் மடக்கி சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி தங்க நகைகள் கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அந்த வாகனத்தை ஓசூர் துணை ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று அதிலிருந்து பொருட்களை வெளியே எடுத்து சோதனை செய்தனர். மேலும் விசாரணையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தங்க நகைகளை இந்த கொரியர் சர்வீஸ் நிறுவனத்தின் பெற்று வந்து ஓசூரில் உள்ள பிரபல ஜுவல்லரிக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது.
மேலும் அதிகாரிகள் சோதனை செய்ததில் மொத்தமாக 69 பெட்டிகளில் தங்க நகைகள் இருந்தது உரிய ஆவணங்களின் ஆவணங்கள் என்று இன்றி கொண்டுவரப்பட்ட தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 15 கோடி என தெரிவித்துள்ளனர். மொத்த நகைகளின் எடை 30 கிலோ எனவும் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.