ஓசூர் டிச, 11
இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் அசெம்பிளி ஆலை தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் போன் தயாரிக்கும் முதல் உள்நாட்டு நிறுவனமாக டாட்டா குழுமத்தின் இந்த ஆலை புதிய ஆலை ஓசூரில் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. திட்டமிட்டபடி இந்த ஆலை அடுத்த 12 முதல் 18 மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் இதன் வாயிலாக 50,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.