வேலூர் ஆக, 26
காங்கேயநல்லூரில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் ஞான திருவளாகம் உள்ளது. இங்கு அவரின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், பாராளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் ஆகியோர் வாரியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, முன்னாள் பேரூராட்சி தலைவர் பரமசிவம், கவிஞர் லக்குமிபதி, பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.