சென்னை ஆக, 25
கடந்த மாதம் 11 ம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் எடுத்துச்சென்றதாக சிவி சண்முகம் தரப்பில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், சிவி சண்முகம் அளித்த புகாரின் அடிப்படையில் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை படிக்க..