புதுடெல்லி ஜன, 22
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த சாத்திய கூறுகளை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு வெளியிட்ட தகவலின் படி இதுவரை 21,000 பேரிடம் ஆலோசனை கேட்டதில் 81% பேர் இந்த திட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல 46 அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை கேட்டத்தில் இதுவரை 17 கட்சிகள் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.