உத்திரகாண்ட் நவ, 29
உத்தரகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்கள் என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் அர்னால்டு டிக். ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகழ்பெற்ற சர்வதேச சுரங்கப்பாதை நிபுணரான அவரின் வழிகாட்டுதலின்படி இந்திய பேரிடர் மீட்பு படையினர் செயல்பட்டனர். பல சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அனுபவமே, 41 பேரை பத்திரமாக மீட்க தனக்கு கை கொடுத்ததாக அவர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.