சென்னை நவ, 15
மிதமான மழை பெய்வதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சென்னை, திருவள்ளூருக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், அண்டை மாவட்டங்களான இரண்டு மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படவில்லை. ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இதுவரை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை