வங்கதேசம் நவ, 2
WHO ன் கீழ் செயல்படும் தென் கிழக்காசிய பிராந்திய அமைப்பின் இயக்குனராக வங்கதேச பிரதமர் சேக் ஹசீனாவின் மகள் டாக்டர் சைமா வாசி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியா, இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளை உறுப்பாக கொண்ட இந்த அமைப்பின் 76 வது கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. அதில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் நேபாளத்தை சேர்ந்த ஷம்பு பிரசாத்தை ஆறு வாக்குகள் வித்தியாசத்தில் சைமா தோற்கடித்த தேர்வாகியுள்ளார்.