திருப்பூர் அக், 25
அரசியல் கட்சிகளின் போஸ்டர், கொடிக்கம்பம் இல்லாத கிராமங்களை காண்பது அரிது. அப்படி அரிதான ஒரு கிராமம் தான் திருப்பூர் அருகே உள்ள எம். நாதம்பாளையம் 1991 சட்டசபை தேர்தலின் போது போஸ்டர் ஓட்டுவதில் அங்கு பெரிய தகராறு ஏற்பட்டு விட்டது. அப்போது முதல் அரசியல் கட்சிகளுக்கு கொடிக்கம்பம் நடக்கூடாது என்பன போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை ஊர் மக்கள் விதித்துள்ளனர். இப்போது வரை இதை கடைபிடித்து வருகின்றனர்.