சென்னை அக், 20
மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார். மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் ஆளுநர்கள் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்த உள்ளனர். மேலும், பங்காரு அடிகளார் மறைவையொட்டி மதுராந்தகம், மேல்மருவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.