சென்னை அக், 3
மகளிர் உரிமைத்தொகை ரூபாய் ஆயிரம் வழங்கப்படுவதால் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். கிராம சபை கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசிய முதல்வர், மகளிர் உரிமை தொகை திட்டத்தில் கிராமப்புற பெண்கள் அதிகமாக பயனடைகிறார்கள். ரூபாய் ஆயிரம் என்பது பெண்களும் அவர்களது குடும்பத்திற்க்கும் பெரும் உதவியாக இருக்கும். மேலும் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகமாக வழிவகுத்திருக்கிறது என்றார்.