Spread the love

அரியலூர் ஆகஸ்ட், 20

செந்துறை அருகே உள்ள பாளையக்குடி கிராமம் கீழத்தெருவில் கடந்த ஒரு மாதமாக சீரான முறையில் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் தெருவிளக்குகள் பழுதடைந்ததால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *