Spread the love

அரியலூர் ஆகஸ்ட், 23

உடையார்பாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் நேற்று மாலை குறைந்து பரவலாக குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. பின்னர் கருமேகம் சூழ்ந்து பலத்த மழை பெய்ய தொடங்கியது.

இதில் உடையார்பாளையம், முனியத்தரியன்பட்டி, விளாங்குடி, ஆதிச்சனூர், சுத்தமல்லி, கழுமங்கலம், கச்சிப்பெருமாள், துலாரங்குறிச்சி, சூரியமணல், தத்தனூர், வெண்மாண்கொண்டான், மனகெதி, சோழங்குறிச்சி, அழிசிகுடி, பருக்கல், காடுவெட்டாங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பெய்ந்த இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *