தென்காசி செப், 26
தென்காசி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா இருந்தபோது தென்காசி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் வசந்தி முருகேசன். தொடர்ந்து, 2021ல் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் திமுகவில் இணைந்த வசந்திக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் தற்போது அவர் மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.