Spread the love

கரூர் ஆக, 30

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைப்பதற்கான பணிகளை சட்ட மன்ற தலைவர் இளங்கோ தொடங்கி வைத்தார்.

வேட்டமங்கலம் ஊராட்சியில் ஓலப்பாளையம் முதல் அதியமான்கோட்டை வழியாக மூலிமங்கலம் பிரிவு வரை ரூ. 63 லட்சத்து 18ஆயிரம் மதிப்பிலும், ஓகேஆர் நகர் முதல் நல்லிக்கோவில் வரை ரூ.12லட்சத்து 84ஆயிரம் மதிப்பிலும், சேமங்கியில் இருந்து காமராஜ் நகர் வழியாக ஓகேஆர் நகர் வரை ரூ. ஒரு கோடியே ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலும், குளத்துப்பாளையத்தில் இருந்து ஒரம்புபாளையம் வழியாக கொங்கு நகர் வரை ரூ.16லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலும், எம்ஜிஆர் நகர் முதல் செட்டிதோட்டம் வழியாக கவுண்டன்புதூர் வரை ரூ.49 லட்சத்து 76ஆயிரம் மதிப்பிலும், செல்வநகரில் ரூ.23லட்சத்து 64ஆயிரம் மதிப்பிலும், கோம்புப்பாளையம் ஊராட்சி முத்தனூரில் ரூ.9 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலும், முனிநாதபுரத்தில் ரூ.5லட்சத்து64ஆயிரம் மதிப்பிலும், கோம்புப்பாளையத்தில் ரூ.14 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பிலும்,என்.புகளூர் ஊராட்சி தவிட்டுப்பாளையம் முதல் கட்டிபாளையம் வரை ரூ. 20 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் 3 கோடியே 17 லட்சத்து 83ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது .

இதில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தலைவர் இளங்கோ கலந்து கொண்டு தலைமை வகித்து பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தார்.

மேலும் பூமி பூஜை விழாவில் கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, ஊராட்சித் மன்ற தலைவர்கள் கோம்புபாளையம் பசுபதி, என். புகழூர் மதிவாணன், வேட்டமங்கலம் ராமச்சந்திரன், திருக்காடுதுறை அசோக்குமார், ஊராட்சி செயலர்கள் வேட்டமங்கலம் ரகுபதி, கோம்புப்பாளையம் பாலு,என்.புகளூர் இந்து மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *