கர்நாடகா ஜூலை, 1
கர்நாடகாவில் மழை பற்றாக்குறையால் அணைகள் வற்றி வருகின்றன. குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என அம்மாநில துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டாலும் தண்ணீரை திறந்து விடுவது கடினம் எனவும், மேகதாது திட்டம் பற்றி சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறினார்.