தூத்துக்குடி ஜூன், 28
தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். காலையில் தொடங்கிய சோதனை சுமார் 11 மணி நேரத்தை தாண்டி இரவிலும் தொடர்ந்தது. இந்த சோதனை குறித்து விளக்கம் அளித்த வங்கி தரப்பு, வருமான வரித்துறையினர் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அவர்கள் கேட்கும் விளக்கங்களுக்கு உரிய பதில் அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.