சென்னை மே, 8
ஆயுள் காப்பீட்டின் மீது லோன் வாங்கியவர்கள் அதனை கிரெடிட் கார்டு கொண்டு செலுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று IRDAI உத்தரவிட்டுள்ளது. இந்த அமைப்பு காப்பீட்டு நிறுவனங்களை கண்காணிப்பது மட்டுமில்லாமல் சட்டதிட்டங்களையும் வகுக்கிறது. பலர் லோன் எடுத்துவிட்டு அதனை கிரெடிட் கார்டு மூலம் செலுத்துவது தெரிய வந்துள்ளதால் அதனை ஏற்க வேண்டாம் என்று தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.