சென்னை ஏப்ரல், 2
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நிர்மலா சீதாராமன் புத்தக வாசிப்பு குறைந்து விட்டதாக பலரும் கூறுகின்றனர். அதில் எனக்கு உடன்பாடு இல்லை எழுத்துக்கான மரியாதை தற்போதும் உள்ளது. எழுத்தின் தாக்கம் அளப்பரியது. அதை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது. ஜாதி, மத உணர்வு பிரிவினையை தூண்டும் வகையில் எழுதக்கூடாது. ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தும் கருத்துக்களை எழுத வேண்டும் என்றார்.