Spread the love

ஈரோடு ஜன, 17

ஈரோடு, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம் உள்பட மாவட்டத்தில் 6 இடங்களில் உழவர் சந்தை கள் செயல்பட்டு வருகிறது. மேலும் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. காய்கறிகள் மேலும் உழவர் சந்தைகளில் தினமும் விவசாயிகள் பலர் காய்கறிகளை கொண்டு வந்து குறைந்த விலையில் விற்பனை செய்கிறார்கள்.

மேலும் இங்கு பயிறு வகைகள், பருப்பு வகைகள், சிறுதானி யங்கள், காளான் மற்றும் பழ வகைகளும் குறைந்த விலையில் கிடக்கிறது. இதே போல் ஏராளமான பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள். மார்க்கெட் இதே போல் ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டுக்கு விவ சாயிகள் மற்றும் வியா பாரிகள் காய்கறி மற்றும் பழ வகைகள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து காய்கறி மற்றும் பழ வகைகளை மொத்தமாகவும் சில்லரையாகவும் வாங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வரு கிறது. மேலும் பழனி உள்பட முருகன் கோவில்களுக்கு அதிகளவில் பக்தர்கள் மாலை அணிந்து சென்று வருகிறார்கள். இதனால் மார்க்கெட்டு மற்றும் உழவர் சந்தைகளில் காற்கறி மற்றும் பழங்கள் விற்பனை அதிகரித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *