திருவள்ளூர் ஆகஸ்ட், 11
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருகின்ற 15 ம்தேதி 75 வது சுதந்திர தின அமுத பெருவிழா நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் ஆகஸ்டு மாதம் 13 முதல் 15 வரை தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மகளிர் சுய உதவி குழுவினரால் தற்காலிக தேசிய கொடி விற்பனை அரங்கு அமைக்கப்பட்டது.
இதனை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார். அவருடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் கல்பனா, சந்திரசேகர், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் திரளான அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்