ராஜபாளையம் ஆகஸ்ட், 11
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் ஆகிய பகுதிகளில் ஏராளமான நெசவுத்தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் முளைக்கொட்டு விழா நடத்துவது வழக்கம்.
இந்த ஆண்டு முளைப்பாரி விழா நடத்தப்பட்டது. இதையொட்டி சத்திரப்பட்டி புது தெரு, வடக்குத் தெரு, நடுத்தெரு, கீழ, மேல் பகுதி போன்ற பகுதிகளில் முளைக்கொட்டு விழா நடத்தப்பட்டது.
அனைத்து கிராமங்கள் தெருக்கள் வழியாக சுற்றி முளைப்பாரிகளுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் ஊர்வலமாக சென்றனர்.
மேலும் நத்தம்பட்டி சாலையில் உள்ள துரைமடம் அருகே உள்ள கிணற்றில் முளைப்பாரிகள் கரைக்கப்பட்டன. முளைக்கொட்டு விழாவை யொட்டி அனைத்து மருத்துவத்துணி உற்பத்தியாளர்கள், பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதிக்கான தொழிற்சாலைகள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தன. விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர். மேலும் ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரீத்தி தலைமையில் வடக்கு காவல் ஆய்வாளர் ராஜா உள்பட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.