Spread the love

புதுக்கோட்டை டிச, 26

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடுதிட்டத்தின் கீழ் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம், புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சலீம் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை, ஆணைப் பட்டி கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது.

இம்முகாமிற்கு ஆணைப் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். தற்போது நிலவி வரும் கொரனோ நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை பற்றியும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் உடல் சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிறுவலி, எலும்புவலி, மயக்கம் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவனைகளை அணுகி முறையான பரிசோதனை செய்து நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் முகாமில் அறிவுறுத்தப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மதுபாலன் செய்திருந்தனர். முடிவில் காப்பீடு திட்ட ஒருங்கினைப்பாளர் பாண்டியராஜ் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *