கிருஷ்ணகிரி டிச, 25
ஓசூரில், பத்தல பள்ளி காய்கறி மார்க்கெட் பின்புறம் சாரல் நகர், செர்ரி ஹோம்ஸ், சுனில் நகர், சுவீட் ஹோம்ஸ்,பாவை கார்டன், விஷ்ணு நகர் உள்ளிட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு முறையான சாலை வசதி இல்லாததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த ஆண், பெண் என 60-க்கும் மேற்பட்டோர் குழந்தை குட்டிகளுடனும், பள்ளி சிறுவர்களுடனும் ஓசூர் தாலுக்கா அலுவலகத்திற்கு திரண்டு வந்து, அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.