Spread the love

நெல்லை டிச, 23

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் நீர்வள நிலவளத் திட்டத்தின் இடைகால் கிராமத்தில் திறன் வளர்த்தல் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் சுபாவாசுகி வரவேற்புரை நிகழ்த்தி திட்ட விளக்கவுரை ஆற்றினார். பாப்பாக்குடி வட்டார ஊராட்சி ஒன்றியத் துணைத்தலைவர் மாரிவண்ணமுத்து தலைைம தாங்கி சிறப்புரை ஆற்றினார். இடைகால் கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் பிரியதர்சினி முன்னிலை வகித்தார். அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ரஜினிமாலா மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் பற்றிய தொழில்நுட்பங்கள் பற்றி கூறினார். ராஜா வாழை நாரிலிருந்து தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள் பற்றி பயிற்சி அளித்தார்.

நெல்லை மாவட்ட வேளாண் அறிவியல் மையம் மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் திருமலைசெல்வி வாழைபழ ஸ்குவாஷ் மற்றும் தக்காளியில் கெட்ச்அப் தயாரிப்பது மற்றும் பயன்படுத்துதல் பற்றி பயிற்சி அளித்தார். பனை ஓலை மற்றும் பனை நாரிலிருந்து தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள் வீட்டில் பயன்படுத்தப்படும் முறம் போன்ற பொருட்களை வடக்கு சிவகாமிபுரத்தை சார்ந்த காளியப்பன் மற்றும் அனஞ்சி செய்துகாட்டி பயிற்சி அளித்தனர். ஈசன் காளான் வளர்ப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள் பற்றியும் பயிற்சி அளித்தார்.

இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை தோட்டக்கலை அலுவலர் விக்னேஷ், உதவி தோட்டக்கலை அலுவலர் பாஸ்கர் மற்றும் முன்னோடி விவசாயி மருதுபாண்டி ஆகியோர் செய்து இருந்தனர். இப்பயிற்சியில் இடைகால் கிராம விவசாயிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *