திருச்சி டிச, 21
திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேலும் ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை மீது துறைரீதியான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் மாவட்ட செயலாளர் ராமதாசு, மாவட்ட இணைச்செயலாளர் தவுலத்உசேன்கான் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மாணிக்கம் நன்றி கூறினார்.