Spread the love

தென்காசி டிச, 13

கடையநல்லூர் ஒன்றியம் சொக்கம்பட்டி ஊராட்சியில் மாவட்ட கவுன்சிலர் கனிமொழியின் நிதியின் கீழ் ரூ.9.95 லட்சம் மதிப்பீட்டில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கு தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளரும் மாநில தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை மற்றும் அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆறுமுகச்சாமி, தி.மு.க. மாவட்ட நகர் மன்ற தலைவரும் மாவட்ட துணைச் செயலாளருமான கனிமொழி, ஒன்றிய செயலாளர் சுரேஷ், கடையநல்லூர் யூனியன் துணை சேர்மன் ஐவேந்திரன் தினேஷ், யூனியன் கவுன்சிலர்கள் கீதா மணிகண்டன், உட்பட ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *