கடலூர் டிச, 1
கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் கம்மாபுரத்தில் நடந்தது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் பாலசுப்பி்ரமணியம் தலைமை தாங்கினார். வளர்ச்சித்திட்ட பணிகள் மேலும் அங்கன்வாடி மைய கட்டிடங்கள், கழிப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் போன்ற அனைத்து வளர்ச்சித்திட்ட பணிகளையும் தரமாகவும், குறிப்பிட்ட கால கட்டத்துக்குள் செய்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் பவன் குமார் ஜி கிரிப்பனவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, குமரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வபாலன், ஊராட்சி கூட்டமைப்பு தலைவர் வளர்மதி ராஜசேகர், செயலாளர் வெங்கடேசன் மற்றும் ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.