Spread the love

தஞ்சாவூர் நவ, 29

திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது. திருவையாறு ரோட்டரி சங்கமும் கோவை சங்கரா கண் மருத்துவ மனையும் இணைந்து நடத்திய இலவச கண்சிகிச்சை முகாமில் 109 வெளி நோயாளர்களுக்கு கண்சிகிச்சை அளிக்கப்பட்டது. 33 கண் நோயாளர்களுக்கு கண்புரை கண்டுபிடிக்கப்பட்டு, இலவச. கண் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டு கோவை சங்கராண் மருத்துவ மனைக்கு சிறப்பு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இம்முகாமில் திருவையாறு ரோட்டரி சங்கத் தலைவர் கணேசன், செயலாளர் செந்தில்குமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சேவையாற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *