சென்னை நவ, 25
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சூர்யா 42 படம் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் இலங்கையில் நடைபெற உள்ளது இதற்காக சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கை செல்ல உள்ளனர். அங்கு பிரம்மாண்டமாக காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.