Month: September 2022

தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கப்பணிகள், தன்னார்வலர்களுக்கு விருது வழங்கி பாராட்டு.

சென்னை செப், 4 சென்னை மாநகராட்சியின் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில், தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் குடியிருப்பு நல சங்கங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.…

நெல்லையப்பர் கோவில் ஆவணி மூலத்திருவிழா.

நெல்லை செப், 3 கருவூர் சித்தர் நெல்லையப்பர் கோவில் வாசல் முன் நின்று சுவாமியை அழைத்தார். ஆனால் நெல்லையப்பர் காட்சி கொடுக்காததால் கோபம் அடைந்த சித்தர் வடக்கு நோக்கி பயணித்தார்.பின்னர் மானூரில் அம்பலவாண முனிவரை சந்தித்து நடந்ததை கூறினார். அப்போது தாமதமாக…

மரபணு மாற்றம் செய்த பருத்தி விதைகள் விற்றால் கடும் நடவடிக்கை. துணை இயக்குனர் எச்சரிக்கை.

நெல்லை செப், 3 நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பருத்தியில் களைக்கொல்லி தாங்கி வளரக்கூடிய வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கவில்லை.இதுபோன்ற அரசு அங்கீகாரம் இல்லாத…

நெகிழி இல்லாத நெல்லையை உருவாக்கும் நோக்கில் பள்ளி மாணவ மாணவிகள் நடத்திய சைக்கிள் பேரணி

நெல்லை செப், 3 நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள அகஸ்தியர்பட்டியில் நெகிழிகளை பயன்படுத்துவதை தடுக்கும் விதத்தில் பள்ளி மாணவர்களால் நடத்தப்பட்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது. வி.கே.புரம் பகுதியில் உள்ள ஆசிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் 100 -க்கும்…

தமிழக முதல்வர் பங்கேற்கும் அரசு விழாவுக்கான மேடை அமைக்கும் பணி

நெல்லை செப், 3 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 8-ம் தேதி காலை 10 மணிக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். ரூ.5 கோடியில் அறிவிக்கப்பட்ட பொருநை அருங்காட்சியகத்துக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். பாளையங்கோட்டையில்…

மழை காரணமாக பள்ளமடையில் 50 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

நெல்லை செப், 3 தென்மேற்கு பருவமழை காலம் நிறைவு பெற்றும், தென்மாவட்டங்களில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. தினமும் முற்பகலில் நல்ல வெயில் காணப்பட்டாலும், பிற்பகலில் வானம் மேகமூட்டத்தோடு மாறி, பல்வேறு இடங்களில் நல்ல மழை காணப்படுகிறது. குறிப்பாக மேற்குத்…

மாவட்ட அறிவியல் மையத்தில் மூலிகை முற்றம் நிகழ்ச்சி.

நெல்லை செப், 3 நெல்லை மாவட்ட அறிவியல் மையம் மற்றும் பாபநாசம் உலக தமிழ் மருத்துவ கழகம் இணைந்து நடத்தும் மூலிகை முற்றம் 2.0 என்ற மூலிகைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் 3வது சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது.…

களக்காட்டில் ஸ்தோத்திர பண்டிகை. தேசிய கொடியுடன் கிறிஸ்தவர்கள் ஊர்வலம்.

நெல்லை செப், 3 நெல்லை மாவட்டம் களக்காடு சி.எஸ்.ஐ.கிறிஸ்தவ ஆலயத்தில் ஆண்டு தோறும் ஸ்தோத்திர பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான ஸ்தோத்திர பண்டிகை நேற்று தொடங்கியது. இதையொட்டி கிறிஸ்தவர்களின் ஊர்வலம் நடந்தது. சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் தொடங்கிய ஊர்வலம், களக்காடு…

வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்.

விருதுநகர் செப், 3 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள், பாதள…

மெக்சிகோவில் முதல்முறையாக சுவாமி விவேகானந்தரின் சிலை திறப்பு!

மெக்சிகோ சிட்டி செப், 3 மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மெக்சிகோ சென்றுள்ள இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் அங்கு இருநாட்டு உறவு குறித்து விவாதித்தனர். மெக்சிகோவில் முதல்முறையாக சுவாமி விவேகானந்தரின் சிலையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா திறந்து…