Category: மாவட்ட செய்திகள்

தமிழக முதல்வர் பங்கேற்கும் அரசு விழாவுக்கான மேடை அமைக்கும் பணி

நெல்லை செப், 3 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 8-ம் தேதி காலை 10 மணிக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். ரூ.5 கோடியில் அறிவிக்கப்பட்ட பொருநை அருங்காட்சியகத்துக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். பாளையங்கோட்டையில்…

மழை காரணமாக பள்ளமடையில் 50 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

நெல்லை செப், 3 தென்மேற்கு பருவமழை காலம் நிறைவு பெற்றும், தென்மாவட்டங்களில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. தினமும் முற்பகலில் நல்ல வெயில் காணப்பட்டாலும், பிற்பகலில் வானம் மேகமூட்டத்தோடு மாறி, பல்வேறு இடங்களில் நல்ல மழை காணப்படுகிறது. குறிப்பாக மேற்குத்…

மாவட்ட அறிவியல் மையத்தில் மூலிகை முற்றம் நிகழ்ச்சி.

நெல்லை செப், 3 நெல்லை மாவட்ட அறிவியல் மையம் மற்றும் பாபநாசம் உலக தமிழ் மருத்துவ கழகம் இணைந்து நடத்தும் மூலிகை முற்றம் 2.0 என்ற மூலிகைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் 3வது சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது.…

களக்காட்டில் ஸ்தோத்திர பண்டிகை. தேசிய கொடியுடன் கிறிஸ்தவர்கள் ஊர்வலம்.

நெல்லை செப், 3 நெல்லை மாவட்டம் களக்காடு சி.எஸ்.ஐ.கிறிஸ்தவ ஆலயத்தில் ஆண்டு தோறும் ஸ்தோத்திர பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான ஸ்தோத்திர பண்டிகை நேற்று தொடங்கியது. இதையொட்டி கிறிஸ்தவர்களின் ஊர்வலம் நடந்தது. சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் தொடங்கிய ஊர்வலம், களக்காடு…

வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்.

விருதுநகர் செப், 3 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள், பாதள…

அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

தூத்துக்குடி செப், 3 அதிமுக. பொதுக்குழு விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால், தூத்துக்குடியில் அதிமுக.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடுத்த…

நவீன தொழில்நுட்ப மைய கட்டிடம் கட்டுமான பணிகள். அமைச்சர்கள் அடிக்கல்.

திருப்பூர் செப், 3 உடுமலையில், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில்ரூ.3¾ கோடியில் கட்டப்பட உள்ள நவீன தொழில்நுட்ப மைய கட்டிடம் கட்டுமான பணிகளுக்கு அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உடுமலையில் தமிழ்நாடு அரசு…

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்.

வேலூர் செப், 3 தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தவும், தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி போடுவதற்கு தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்…

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்

விழுப்புரம் செப், 3 இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர், முதன்மை அரசு செயலாளர் அவர்களால் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் (அல்லது)…

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம்

விருதுநகர் செப், 3 விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை விருதுநகரில் 42…