Spread the love

அரியலூர் நவ, 11

அரியலூர் மாவடடம், தா.பழூர் கிராமத்தில் பகுதி நேர புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது. ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் கண்ணன் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்தார். பின்னர் அவர் குடும்ப அட்டைதாருக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு துணைப் பதிவாளர் அறபளி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சார் பதிவாளர் சசிகுமார், வட்ட வழங்கல் அலுவலர் ஜானகிராமன், ஊராட்சித் தலைவர் கதிர்வேல், கூட்டுறவு சங்கத் தலைவர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *