கள்ளக்குறிச்சி நவ, 3
ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட தாட்கோ அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
இதை அடுத்து தாட்கோ அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் சரவணகுமார் பார்வையிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாவட்ட தாட்கோ அலுவலகத்தின் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அச்சிட்ட துண்டு பிரசுரங்களை வினியோகித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட தாட்கோ மேலாளர் மாயக்கண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.