மென்லோபார்க் நவ, 1
இளைஞர்களிடையே மிகப் பிரபலமான சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் உலகளவில் நேற்று திடீரென முடங்கியது. இதை தொடர்ந்து அதனை பயன்படுத்த முடியவில்லை என டுவிட்டர் போன்ற பிற சமூக வலைத்தளங்களில் பயனர்கள் பலர் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்த புகார் குறித்து இன்ஸ்டாகிராம் நிறுவனம் வருத்தம் தெரிவித்தது. இது குறித்து இன்ஸ்டாகிராம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘உங்களில் சிலருக்கு உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை அணுகுவதில் சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம், சிரமத்திற்கு வருந்துகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, உலகளவில் ஏறத்தாழ 8 மணிநேரம் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதாக அதன் உரிமையாளரான மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.