நாகப்பட்டினம் அக், 26
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை தேதி கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கி நடக்கும் இந்தக் கல்விக் கடன் முகாமில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் பங்கேற்கின்றன.
இது தொடர்பான முழு விபரங்களை ஏற்கெனவே நாகை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அதன்படி வங்கிக் கடன் முகாமில் மாணவர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டுமென நாகை சட்ட மன்ற உறுப்பினர் முகம்மது ஷா நவாஸ் வலியுறுத்தியுள்ளார்.