நைரோபி அக், 26
பாகிஸ்தான் பத்திரிகையாளர் அர்ஷாத் ஷெரீப். இவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை தீவிரமாக ஆதரித்தும், ராணுவத்தை கடுமையாக விமர்சித்தும் வந்தார். இவர் இங்கிலாந்து மற்றும் துபாய்க்கு சென்று விட்டு கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவுக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் அவர் கென்யாவில் தலைநகர் நைரோபி அருகில் உள்ள கஜியாடோ என்ற இடத்தில் ஒரு சாலைத்தடுப்பில் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்காக வருத்தப்படுவதாக காவல் துறை தரப்பில் அங்கு ஒரு அறிக்கை வெளியானது. ஆனால் இந்த சம்பவம் பாகிஸ்தானில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. கராச்சியில் பத்திரிகையாளர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.