Spread the love

ராணிப்பேட்டை அக், 18

அரக்கோணம் நகராட்சியில் தூய்மை பணியில் ஒப்பந்த தொழிலாளர்களாக சுமார் 150-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. எனவே சம்பளம் வழங்கக்கோரியும், இவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகின்ற தொழிலாளர் வைப்பு நிதியை வழங்கக்கோரியும் அரக்கோணம் நகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நகராட்சி ஆணையர் லதா, பொறியாளர் ஆசீர்வாதம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *