Spread the love

நாகப்பட்டினம் அக், 7

நாகை காடம்பாடியில் உள்ள மகாலட்சுமி சாய்பாபா கோவிலில் விஜயதசமி மற்றும் சீரடி சாய்பாபாவின் 104வது மகாசமாதி தினத்தையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *