Spread the love

நாகர்கோவில் அக், 7

கன்னியாகுமரி-கொல்லம் இடையே 2 ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவில் ஜங்ஷன்-திருவனந்தபுரம் சென்டிரல் பிரிவில் நேமம்- நெய்யாற்றின் கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே நாளை ரயில்வே பணி நடைபெற உள்ளது. எனவே நாளை கொல்லம் ஜங்ஷன்-கன்னியாகுமரி மெமு எக்ஸ்பிரஸ் ரயிலும், கன்னியாகுமரி-கொல்லம் மெமு எக்ஸ்பிரஸ் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம் நாகர்கோவில் ஜங்ஷனில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் கோட்டயம் எக்ஸ்பிரஸ் ரயில் 1½ மணி நேரம் தாமதமாக 2.30 மணிக்கு புறப்படும்.

மேலும் இதே போல் கொச்சுவேளியில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட வேண்டிய பயணிகள் ரெயில் 1½ மணி நேரம் தாமதமாக 3.10 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்பட்டு வருகிறது. மேற்கண்ட தகவல் திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *