Spread the love

ராணிப்பேட்டை அக், 3

ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தியின் 154- வது பிறந்த நாள், மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மேலும் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவு தினமும் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளை முன்னிட்டு ராணிப்பேட்டை முத்துக் கடையில் உள்ள காந்தி சிலைக்கு ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் அண்ணாதுரை தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள காந்தி சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *