Spread the love

தூத்துக்குடி அக், 2

கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியின் 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு, இந்திய தேர்தல் ஆணையாளர் ராஜிவ்குமார் பாராட்டு கடிதத்தை வழங்கி பொன்னாடை போர்த்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் பலர் கலந்து கொண்டார்கள். இவர்களுக்கு உதவி ஆட்சியர் மகாலட்சுமி பொன்னாடை அணிவித்து, தேர்தல் ஆணையாளர் ராஜிவ் குமார் பாராட்டு கடிதத்தை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி தாசில்தார் சுசீலா, தேர்தல் துணை வட்டாட்சியர் சங்கரநாராயணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *