Spread the love

திருப்பூர் செப், 28

குண்டடம் ருத்ராவதி பேரூராட்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் மீனா கௌரி தலைமை தாங்கினார் பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள், துணைத் தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் 15வது நிதிக்குழு திட்டத்தின் வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இவ்விழாவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற புது ருத்ராவதி தலைமையாசிரியர் ராஜேந்திரனுக்கு பேரூராட்சி சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார் இதில் பேரூராட்சி நகர் மன்ற உறுப்பினர்கள் அலுவலக பணியாளர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *