Spread the love

சென்னை ஆகஸ்ட், 3

தேசிய அளவில் பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு கருத்தடை வளையம் பொருத்துவதில் தமிழகம் முதல் இடம் பெற்றது. இதற்காக மத்திய அரசு விருது வழங்கி உள்ளது.

இந்த விருதை குடும்பநலத்துறை இயக்குனர் ஹரிசுந்தரி மற்றும் உயர் அலுவலர்கள் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *