சென்னை செப், 27
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து விளக்கம் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், அன்பில் மகேசஷ்க்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதாகவும், முன்னெச்சரிக்கையாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அவருக்கு உரிய சிகிச்சைகளை மருத்துவர்கள் வழங்கி வருவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.