கடலூர் செப், 23
மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலாளரும், கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அன்சுல்மிஸ்ரா கடலூர் வருகை தந்தார்.
பின்னர் அவர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியமுடன் சேர்ந்து, கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட வண்ணாரப்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெரு, வண்டிப்பாளையம், சங்கொலிநகர், வேதவிநாயகா நகர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார் சாலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து கோதண்டராமபுரம் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் மற்றும் வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது குறித்து நேரடியாக விவசாயிகளிடம் கேட்டறிந்து, விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் வேளாண் உபகரணங்களை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன், பொறியாளர் புண்ணியமூர்த்தி மற்றும் வேளாண்மை, மாநகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.