நாகை செப், 20
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேஷன் துறை கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்து சென்றுள்ளது. காரைநகர் கடற்பகுதியில் வைத்து 8 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளது.